Connect with us

Raj News Tamil

“டேய்.. உன்ன தான் எனக்கு புடிக்கும்” – இன்ஸ்டா காதலனுடன் மாயமான பள்ளி ஆசிரியை! புலம்பும் கணவன்!

தமிழகம்

“டேய்.. உன்ன தான் எனக்கு புடிக்கும்” – இன்ஸ்டா காதலனுடன் மாயமான பள்ளி ஆசிரியை! புலம்பும் கணவன்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோம்பை புதூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், புஷ்பராஜ் என்பவரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

இவ்வாறு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் என்ற செயலி, இருவரது வாழ்க்கையிலும், எமனாக வந்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்கு தொடர்ந்த நித்யா, நவீன் என்ற இளைஞருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இவர்களது பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த புஷ்பராஜ், தனது மனைவியை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, நித்யா காணாமல் போயுள்ளனர்.

தனது காதலனுடன் தான் ஓடி போயிருப்பார் என்பதை கணித்த புஷ்பராஜ், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், செல்போன் எண்ணை வைத்து, அவரை தேடியும் வருகின்றனர். காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை, வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top