Connect with us

Raj News Tamil

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை!

இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மைமூர் கராமி என்ற நபரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

மேற்குவங்காளத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது இதில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் உள்பட ஏராளமானோர் பலியாகினர்.

இந்த நிலையில் நேற்று இரவு தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் கிழக்கு கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மைமூர் கராமி தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். மைமூர் கராமி காப்பாற்ற முயன்ற அவருடைய நண்பரையும் மர்ம நபர்கள் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். மைமூர் கராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top