Connect with us

Raj News Tamil

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் விஜய் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? கோபத்தில் ரசிகர்கள்!

சினிமா

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் விஜய் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? கோபத்தில் ரசிகர்கள்!

அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து, ஜெயிலர் பட ரிலீஸின்போது, அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனைக்கு தூபம் போடும் வகையில், ஜெயிலர் பட மேடையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் பேச்சு அமைந்திருந்தது.

அதாவது, ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்றும், அவரது பட்டத்திற்கு யாரும் ஆசைப்படாதீர்கள் என்றும், மிகவும் வெளிப்படையாக பேசினார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி, ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, இயக்குநர் அட்லி மேடையில், விஜய் பற்றி பேசியிருந்தார். ஆனால், அந்த குறிப்பிட்ட பகுதிகள் மட்டும், டிவியில் ஒளிபரப்பாகும்போது, கட் செய்யப்பட்டிருந்தது.

இதுவும், விஜய் ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இனி நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, விஜயின் 69-வது திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை, அட்லி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல், விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top