தமிழகம்
புனித தலத்தில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! காரணம் என்ன? பெரும் பரபரப்பு!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான். 34 வயதாகும் இவர், மனைவி சஜிதா பேகம், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று, மாமியார் வீட்டிற்கு சென்ற இம்ரான் கான், சமாதானம் பேசி, தனது மனைவியை வெளியே அழைத்து சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில், இருவரும் இசுலாமிய தர்காவிற்கு சென்றனர். அங்கு, அமர்ந்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது மனைவியை சரமாரியாக அவர் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்து அமைதியாக வெளியேறிய அவர், காவல்நிலையத்தில் நடந்ததை கூறி சரண் அடைந்தார்.
எதற்காக மனைவியை கொலை செய்தார்? என்று காவல்துறையினர் விசாரணைக்கு பிறகே தெரியவரும். முஸ்லீம்களின் புனித தலங்களில் ஒன்றான தர்காவில், கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login