Connect with us
Raj News Tamil

Raj News Tamil

“ரொம்ப தொந்தரவு பண்றான்” – ஆற்றில் மிதந்த கணவன் சடலம்..! கள்ளக்காதலுக்காக கொன்ற மனைவி!

தமிழகம்

“ரொம்ப தொந்தரவு பண்றான்” – ஆற்றில் மிதந்த கணவன் சடலம்..! கள்ளக்காதலுக்காக கொன்ற மனைவி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கடுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்த். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். செய்யாறு பகுதியில் உள்ள சிப்காட்டில் வேலைக்கு சென்று வந்த ராஜேஸ்வரிக்கு, உதயசூரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதுமட்டுமின்றி, வீட்டிற்கு வந்த பிறகும், உதயசூரியன் உடன் ராஜேஸ்வரி நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கவனித்த லட்சுமிகாந்த், மனைவி கண்டித்துள்ளார்.

இதுகுறித்து கள்ளக்காதலனிடம் கூறியதற்கு, அவரை கொன்றுவிடலாம் என்று இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த 23-ஆம் தேதி அன்று லட்சுமிகாந்தை சந்தித்த உதயசூரியன், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளார்.

பின்னர், உடலை அருகில் விவசாய கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top