Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சிறையில் இருந்த வாலிபர் மரணம்.. உறவினர்கள் எடுத்த அதிரடி முடிவு!

தமிழகம்

சிறையில் இருந்த வாலிபர் மரணம்.. உறவினர்கள் எடுத்த அதிரடி முடிவு!

பாளையங்கோட்டை சிறையில் இருந்த விசாரணை கைதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவர், கடந்த 12-ஆம் தேதி அன்று, பெட்டிக்கடையில் மது விற்பனை செய்ததாக கூறி, கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது, இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கச்சாமியின் உறவினர்கள், புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தங்கச்சாமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அவரது உயிரிழப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து, உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து களைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top