Connect with us

Raj News Tamil

மது குடித்த பெண்.. ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற இளைஞர்..

இந்தியா

மது குடித்த பெண்.. ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற இளைஞர்..

பஞ்சாப் மாநிலம் பட்டியலாவில் உள்ள குருத்வாரா பகுதியை சேர்ந்தவர் நர்மல் ஜித் சிங். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தீவிர ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்.

இந்நிலையில், குருத்வாரா பகுதிக்கு வந்த இளம்பெண் ஒருவர், திடீரென மது அருந்தியுள்ளார். இதனை பார்த்த நர்மல் ஜித், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, சரமாரியாக சுட்டுத்தள்ளியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையில் சரண் அடைந்த அவர், “குருத்வாரா என்பது ஒரு ஆன்மீக தளம். அதன் மேன்மையை கெடுக்கும் வகையில், அந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் மது அருந்தினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நர்மல் ஜித்தை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த பெண் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top