தமிழகம்
கழுத்தில் கயிறு சிக்கியதில் சிறுவன் உயிரிழப்பு
பல்லாவரம் அருகே, துணி காய வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கயிறு கழுத்தி சிக்கி, 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது மனைவி மற்றும் 12 வயது மகன் அதிரதன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், துணி காய வைக்கும் கயிற்றை வைத்துக் கொண்டு, சிறுவன் அதிரதன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராவிதமாக, சிறுவனின் கழுத்தில், கயிறு சிக்கிக் கொண்டுள்ளது.
இதனால், மூச்சுத் திணறிய அந்த சிறுவன், பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login