Connect with us

Raj News Tamil

துணியின் மீது மோகம்.. 18 ஆயிரம் கடன்.. சுட்டுக்கொல்லப்பட்ட 14 வயது சிறுவன்..

இந்தியா

துணியின் மீது மோகம்.. 18 ஆயிரம் கடன்.. சுட்டுக்கொல்லப்பட்ட 14 வயது சிறுவன்..

18 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, 14-வயது சிறுவனை கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள ஷாபாத் என்ற பகுதியில், அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், உயிரிழந்த சிறுவன் மஞ்ஜீத்(14 வயது) என்பதும், கடந்த 9-ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறிய அவன், வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும், மஞ்ஜீத் தனது வீட்டின் அருகில் உள்ள துணிக்கடையில், 18 ஆயிரம் ரூபாய் கடனுக்கு துணி வாங்கியிருப்பதும், அதனை கட்ட முடியாததால் ஏற்பட்ட பிரச்சனையில், அந்த கடையின் உரிமையாளர்களே, மஞ்ஜீத்தை கொலை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில், தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். 18 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, 14-வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top