தமிழகம்
தந்தை கொலை.. 10 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மகன்.. ரவுடி கொடூர கொலை..
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார். கருப்பு குமார் என்ற அழைக்கப்படும் இவர் மீது, காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த 21-ஆம் தேதி, தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், குமாரை சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், முன்பகை காரணமாக, இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அதாவது, கருப்பு குமார் கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று வெங்கடேசன் என்பவரை கொலை செய்ததாக, கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதால், வெங்கடேசனின் உறவினர்கள் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, கருப்பு குமாரை பழிவாங்க, வெங்கடேசனின் மகன் ஆகாஷ் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து, கடந்த 10 ஆண்டுகளாக திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி, கருப்பு குமாரை சரியான நேரம் பார்த்து அவர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, பூபதி, பார்த்திபன், பாக்சர் முரளி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login