தமிழகம்
65 வயது மூதாட்டியின் 45 வருட கனவு.. உடனே நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
சேலம் மாவட்டம் அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கண்ணம்மாள். 65 வயதான இவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கடந்த 45 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்.
ஆனால், எவ்வளவு போராடியும், அவரது ஆசை, நிறைவேறாமலே இருந்து வந்தது. இந்நிலையில், சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகை தந்திருந்தார்.
அப்போது, மூதாட்டி கண்ணம்மாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், “உங்களிடம் புகைப்படம் எடுப்பதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். அந்த ஆசையை நிறைவேற்றி தருவீர்களா” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, அந்த மூதாட்டியை நேரில் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது வாழ்நாள் கனவு நிறைவேறியதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
You must be logged in to post a comment Login