இந்தியா
70 வயது பார்வையற்ற மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள சுதம்தி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி. கண்பார்வை குறைபாடு உள்ள இவர், தனது வீட்டில் தனியாக அமர்ந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வீட்டின் உள்ளே நுழைந்த 55 வயதான நபர், மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து, மூதாட்டியும் அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்த நபர், மூதாட்டி முன்பு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login