Connect with us

Raj News Tamil

கார் விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் பலி!

இந்தியா

கார் விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் பலி!

உத்தர பிரதேசத்தின் பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதனால் காரில் தீ பற்றியது. கார் கதவுகளை உள்ளிருந்து திறக்க முடியாமல் போனதால், அதில் இருந்த குழந்தை உட்பட 8 பேரும் தீயில் சிக்கி எரிந்தனர். பயங்கர சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் காருக்குள் சிக்கியவர்கள் தீயில் கருதி உயிரிழந்தனர். லாரியில் பயணம் செய்த இருவர் பயங்கர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More in இந்தியா

To Top