இந்தியா
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவர் கைது..!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வலியால் அழுது கொண்டிருந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை டாக்டர்கள் உறுதிசெய்தனர், மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்த 81 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login