Connect with us

Raj News Tamil

புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு – 9 பேர் பலி

உலகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு – 9 பேர் பலி

சீனாவில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன் படி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் இன்று (அந்நாட்டு நேரப்படி இரவு 10.30 மணி) சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் உயிரிழந்தனர். .
மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top