Connect with us

Raj News Tamil

ஆளுநரை தரக்குறைவாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் இணைந்தார்..!

அரசியல்

ஆளுநரை தரக்குறைவாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் இணைந்தார்..!

திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திமுகவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். தனது பேச்சுக்கு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி வருத்தம் தெரிவித்ததால் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top