சினிமா
கமலை கழட்டிவிட்ட எச்.வினோத்!
விக்ரம் படத்திற்கு பிறகு, நடிகர் கமல், எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கான பின்னணி பணிகள், மிகவும் மும்மரமாக நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, எச்.வினோத் கூறிய கதையை , கமல் நிராகரித்துள்ளாராம். அதாவது, வினோத் கூறியது, காவல்துறை தொடர்பான கதையாம்.
ஏற்கனவே, விக்ரம் படத்தில், அதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டதால், அந்த கதையை கமல் நிராகரித்துவிட்டாராம்.
இதனால், இதே கதையை வைத்து, தீரண் படத்தின் இரண்டாம் பாகத்தை, அவர் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.