Connect with us

Raj News Tamil

13வயது மாணவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!

தமிழகம்

13வயது மாணவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் தனியார் ரைபிள் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 13 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவன் ஒருவன் ஏர்கன் மூலம் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் பயன்படுத்திய ஏர்கன்னில் இருந்து அலுமினியக் குண்டு வெளியேறி சிறுவனின் பின்னந்தலையில் பாய்ந்துள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது மாணவன் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top