இந்தியா
காதலனுடன் நெருக்கமாக இருந்த பெண்.. வீடியோவை கணவருக்கு அனுப்பியதால் விவாகரத்து.. கொடூரமாக கொன்ற குடும்பம்..
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் மகேஷ். 24 வயதாகும் இவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு முன்னரே நெருக்கமாக இருந்த இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனை மகேஷ் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகேஷ் உடனான காதலை இளம்பெண் முறித்துக் கொண்டுள்ளார். ஆனால், அதனை ஒத்துக்கொள்ளாத அவர், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கிடையே, இளம்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த மகேஷ், காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை, அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். வீடியோவை பார்த்த கணவர், அந்த இளம்பெண்ணை விவகாரத்து செய்துள்ளார்.
மேலும், மனைவி காதலனுடன் இருந்த வீடியோவை பார்த்த அவர், மனஉளைச்சலில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவ்வாறு பல கொடூர சம்பவங்கள் நடந்த பின்னரும் கூட, தன்னுடன் வாழ வேண்டும் என்று சொல்லி, அந்த பெண்ணுக்கு மகேஷ் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ளாத பெண்ணின் குடும்பத்தினர், மகேஷை நடுரோட்டில் வைத்து, கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலையால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment Login