Connect with us

Raj News Tamil

கலைஞர் கருணாநிதியை விட 10 மடங்கு அதிகமாக கொடுத்த ஆ.ராசா.. எந்த விஷயத்தில் தெரியுமா?

தமிழகம்

கலைஞர் கருணாநிதியை விட 10 மடங்கு அதிகமாக கொடுத்த ஆ.ராசா.. எந்த விஷயத்தில் தெரியுமா?

திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும், நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் ஆ.ராசா. தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான இவரை, புத்தாண்டு தினத்தன்று காண்பதற்கு, அவரது ஆதரவாளர்கள் சென்றுள்ளனர்.

அவருக்கு வாழ்த்துக் கூறிய ஆதரவாளர்கள், புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். அப்போது, தனது கையில் ரூ.200 நோட்டுக்கட்டுகளை வைத்திருந்த ஆ.ராசா, ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டை எடுத்துக் கொடுத்தார். இதனை வாங்கிக் கொண்ட ஆதரவாளர்கள், சந்தோசத்துடன் கிளம்பிச் சென்றனர்.

உண்மையில் இது, கலைஞர் கருணாநிதியின் ஸ்டைல் தான். புத்தாண்டு தினத்தன்று தன்னை காண வரும் உடன்பிறப்புகளை, வெறும் கையோடு அனுப்பக் கூடாது என்பதற்காக, 10 அல்லது 20 ரூபாய் சலவை நோட்டுக்களை, கையில் கொடுப்பார். தனக்கு அரசியல் குருவாக இருந்த கலைஞர் கருணாநிதியின் ஸ்டைலில், தற்போது, ஆ.ராசாவும் இணைந்துள்ளார்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top