Connect with us

Raj News Tamil

“கோடான கோடி நன்றி” – ஐஸ்வர்யா படம் தொடர்பாக தனுஷ் ட்வீட்!

சினிமா

“கோடான கோடி நன்றி” – ஐஸ்வர்யா படம் தொடர்பாக தனுஷ் ட்வீட்!

ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமானவர் ஐஸ்வர்யா. திரைப்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், இதுவரை 3 படங்களை இயக்கி முடித்துள்ளார்.

இதில் முதன்முறையாக இயக்கிய திரைப்படம் 3. நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், அந்த சமயத்தில், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், இந்த திரைப்படம், நேற்று மீண்டும் திரையரங்குகளில், ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் குவிந்தனர்.

இப்படத்திற்கு வழங்கப்படும் ஆதரவை கண்ட தனுஷ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 3 படத்திற்கு வழங்கப்படும் வரவேற்பு எனக்கு எமோஷனலாக உள்ளது என்றும், இந்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றி என்றும், கூறியுள்ளார்.

More in சினிமா

To Top