Connect with us

Raj News Tamil

“கதையே கேட்காமல் நடிப்பேன்.. ஆனால்..” – வெற்றிமாறன் குறித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்!

சினிமா

“கதையே கேட்காமல் நடிப்பேன்.. ஆனால்..” – வெற்றிமாறன் குறித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்!

ராதாமோகன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர், பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். அந்த பேட்டியில், “நான் கதையே கேட்காமல் நடிப்பேன்.. ஆனால், அந்த படங்களை இந்த 3 இயக்குநர்கள் இயக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதாவது, மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், பொம்மை படத்தை இயக்கிய ராதாமோகன் ஆகியோரின் படங்களில், கதையே கேட்காமல் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நான் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள இயக்குநர் வெற்றிமாறன் படத்திலும், கதையே கேட்காமல் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top