Connect with us

Raj News Tamil

சுருண்டது ஆஸ்திரேலியோ: தொடரை வென்றது இந்தியா!

விளையாட்டு

சுருண்டது ஆஸ்திரேலியோ: தொடரை வென்றது இந்தியா!

நான்காவது டி20 போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 37 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரிங்கு சிங்குடன் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 35 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய அக்சர் படேல் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

ஹெட் மற்றும் பிலிப் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஆஸ்திரேலியா அதிரடியாக ரன் குவித்தது.

இருந்தும் 3-வது ஓவருக்கு பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஜோஷ் பிலிப், ஹெட், ஆரோன் ஹார்டி, பென் மெக்டெர்மோட், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் வெளியேறினர். இதில் ஹெட் 31 ரன்கள் எடுத்திருந்தார். ஷார்ட், 22 ரன்கள் பதிவு செய்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட், 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

More in விளையாட்டு

To Top