Connect with us

Raj News Tamil

மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கம்பி எண்ணுவார்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

அரசியல்

மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கம்பி எண்ணுவார்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பிரதமர் மோடி எந்த வேலையும் செய்வதில்லை. தனக்கு பிடிக்காதவர்கள் மீது வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினரை ஏவுகின்ற பணியை மட்டும் தான் செய்து வருவதாக கூறினார்.

அமலாக்கத்துறை சோதனையின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி தோற்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள். அது தவறு என்கிற வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கம்பி எண்ணுவார்கள் என அவர் பேசியுள்ளார்.

More in அரசியல்

To Top