அரசியல்
பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது..!!
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. இவர் ட்விட்டரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருபவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டிற்கு சென்ற காவல் துறை அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment Login