Connect with us

Raj News Tamil

படகு கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாயம்!

இந்தியா

படகு கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாயம்!

பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 மேற்பட்ட மாணவர் காணவில்லை.

பீகார், முசாபர்பூர் மாவட்டம் மதுபூர்பட்டி கேட் என்ற பகுதியில் 30 மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு பாக்மதி நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 20 மாணவர்களை மீட்கப்பட்ட நிலையில், மற்ற மாணவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top