Connect with us

Raj News Tamil

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளித்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிர்ஷ்டம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தமிழ்நாடு அரசு தடை செய்தது செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More in தமிழகம்

To Top