தமிழகம்
“என்னால் கட்டுப்படுத்த முடியல” – தினமும் 5 பெண்களுக்கு பாலியல் தொல்லை! இதுவரை 100 பெண்கள்! அதிர வைத்த இளைஞர்!
சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். 31 வயதாகும் இவர், திருமண நிகழ்ச்சிகளில் பாடல் பாடும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், 22 வயதான இளம்பெண் ஒருவர், சரவணன் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
அதில், “நான் தனியாக சென்றுக் கொண்டிருந்தபோது, அந்த இளைஞர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், அவரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் முடிவில், பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, இந்த இளைஞருக்கு பெண்கள் மீதான மோகம் சற்று அதிகமாகவே இருந்துள்ளது. யாராவது பெண்கள் தனியாக சென்றாலே, அவர்களிடம் அத்துமீறுவதை, வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
சமீபத்தில் கூட, இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், சிறைக்கு சென்று, ஜெயில் தண்டனையும் அனுபவித்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் தான் விடுதலை ஆகியிருந்தார். இருப்பினும் அடங்காமல் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து தன் வார்த்தைகளின் மூலம் வாக்குமூலம் அளித்த அவர், “சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்கள், சிறுமிகளை நோட்டமிட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிவிடுவேன்.
தனியாக இளம்பெண்கள் செல்வதை பார்த்தால் வாகனத்தை நிறுத்திவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடுவேன். என்னை அறியாமலேயே எனக்கு அப்படியொரு எண்ணம் வந்துவிடுகிறது.
இந்த குற்றத்துக்கு நான் காரணமா அல்லது என் உணர்ச்சிகள் காரணமாக என்பது தெரியவில்லை. தினமும் 5 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவேன். இதுவரை 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login