சினிமா
மீண்டும் மணிரத்னம் உடன் மோதும் தனுஷ்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று வெளியானது. அதே நேரத்தில், தனுஷின் நானே வருவேன் என்ற திரைப்படமும் வெளியானது.
இதில், பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனுஷ்-ம், மணிரத்னமும் மீண்டும் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஏப்ரல் மாதம் தான் பொன்னியின் செல்வன் படத்தின் 2-ஆம் பாகம் வெளியாக உள்ளது. தற்போது, அதே மாதத்தில் தான், தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளதாம். பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த வாத்தி திரைப்படம், கிராபிக்ஸ் பணிகள் முடியாததால், ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login