Connect with us

Raj News Tamil

பணம் கேட்டு மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவன் – கைது செய்த போலீஸ்

தமிழகம்

பணம் கேட்டு மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவன் – கைது செய்த போலீஸ்

தாம்பரம் அருகே, தனியார் கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் கவுன்சிலரின் கணவனை, காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 4-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சித்ரா. இவருக்கு, தமிழ்குமரன் என்ற கணவர் உள்ளார்.

தனது மனைவி கவுன்சிலராக இருப்பதால், அப்பகுதியில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து, பணம் கேட்டு மிரட்டுவதை, அவர் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், அனகாபுத்தூர் பகுதியில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின் ஒப்பந்தம், தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தமிழ்குமரன், அந்த நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top