அரசியல்
ஆளுநரிடம் அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி..!
தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்களுடன் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் சிவி.சண்முகம், கேபி.முனுசாமி, ஜெ.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித்தலைவர், தமிழகத்தில் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் 24 மணி நேரமும் மது விற்பனை மற்றும் அனுமதில் பார் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஊடங்களை தயவு செய்து கேட்கிறேன், தமிழகத்தை காப்பாற்றுங்கள், உண்மை சம்பங்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்றார்.
You must be logged in to post a comment Login