Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஈரோடு கிழக்கு தேர்தல் : நாளை வேட்பு மனு தாக்கல்

தமிழகம்

ஈரோடு கிழக்கு தேர்தல் : நாளை வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் நாளை துவங்கவுள்ள நிலையில் அனைத்து தேர்தல் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அலுவலர் சிவகுமார் ,”தேர்தல் தொடர்பான விண்ணப்ப படிவங்கள் தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகன தணிக்கைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top