Connect with us

Raj News Tamil

மனஉளைச்சல்.. யாரிடமும் பேச்சுவார்த்தை இல்ல.. 4 மாத குழந்தையை மண்வெட்டியால் கொன்ற தாய்..

தமிழகம்

மனஉளைச்சல்.. யாரிடமும் பேச்சுவார்த்தை இல்ல.. 4 மாத குழந்தையை மண்வெட்டியால் கொன்ற தாய்..

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் தீனதயாளன். 40 வயதாகும் இவருக்கு, துர்கா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரவசத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற துர்கா லட்சுமி, அங்கேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், துர்கா லட்சமியின் வீட்டில் இருந்து அவரது தந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளர். அங்கு, துர்கா லட்சமியின் 4 மாத பச்சிளங் குழந்தை, மன்வெட்டியால் கொலை செய்யப்பட்டு கிடந்தது.

இதுமட்டுமின்றி, வீட்டில் இருந்த துர்கா லட்சுமி, அவரது தந்தை பரமசிவம், தாய் தமிழரசி, பாட்டி வேதவள்ளி, அண்ணன்கள் ஆண்டவர் மற்றும் நடராஜன் ஆகியோர், ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை மீட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், குடும்பத்தில் இருந்த 7 பேரையும் கொலை செய்ய முயற்சி செய்தது, துர்கா லட்சமி தான் என்பது தெரியவந்தது. அதாவது, தனது தாய் வீட்டில் தங்கி வந்த துர்கா லட்சுமி கடந்த சில வாரங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

யாரிடமும் அவர் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, சம்பவத்தன்று காலை 3 மணிக்கே எழுந்த துர்கா லட்சுமி, தனது பச்சிளங் குழந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றுள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்த அனைவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பத்தை சேர்ந்த 7 பேரில், பச்சிளங் குழந்தையும், துர்கா லட்சுமியின் பாட்டி வேதவள்ளியும் உயிரிழந்துள்ளனர். மற்ற 5 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top