தமிழகம்
நாமக்கல் மாவட்டத்தில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று விடியற்காலை பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று விடியற்காலை பணி மூட்டம் நிலவியது. இதனால் சாலையில் முன்பும் பின்பும் வந்த வாகனங்களும் ஆட்கள் நடமாட்டமும் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு செல்லும் நிலை இருந்தது.
நாமக்கல் சேலம் சாலை, நாமக்கல் துறையூர் சாலை, நாமக்கல் திருச்செங்கோடு சாலை, நாமக்கல் திருச்சி சாலை, உள்ளிட்ட அனைத்து சாலைகளும் இந்த நிலை இன்று விடியற்காலை நிலவியது.
You must be logged in to post a comment Login