Connect with us

Raj News Tamil

முதல்வர் படத்தை அவமரியாதை செய்த நான்கு பேர் கைது..!

அரசியல்

முதல்வர் படத்தை அவமரியாதை செய்த நான்கு பேர் கைது..!

ஓசூர் அருகே விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் படத்தை வைத்து அவமரியாதை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் 5வது சிப்காட் அமைப்பதற்கு அரசு சார்பில் சுமார் 3800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒரு கட்டத்தில் முதல்வர் படத்தை வைத்து அவமரியாதை செய்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த வேலு ,கொத்தூரை சேர்ந்த சக்தி நாராயணன், லாலிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் எல்லப்பன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஓசூர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top