Connect with us

Raj News Tamil

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5பேர் சுட்டுக்கொலை!

இந்தியா

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5பேர் சுட்டுக்கொலை!

குல்காம் மாவட்டம், டிஹெச் போரா பகுதியின் சாம்னோ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினரும், காவல்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

போலீசார், சிஆர்பிஎப் மற்றும் ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்பு படையினருக்கும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே நேற்று முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் காளி எனப் பெயரிடப்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பஷிர் அகமது மாலிக், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

More in இந்தியா

To Top