Connect with us

Raj News Tamil

கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய 40 வயது பெண்.. உள்ளே புகுந்த இளைஞர்.. திடீரென கேட்ட கூச்சல்..

தமிழகம்

கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய 40 வயது பெண்.. உள்ளே புகுந்த இளைஞர்.. திடீரென கேட்ட கூச்சல்..

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு, தூங்கியுள்ளார். இதனை கவனித்த இளைஞர் ஒருவர், அந்த வீட்டின் உள்ளே இருந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இதனால், அந்த பெண் கத்தி கூச்சலிட்டதையடுத்து, இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் காவல்துறையினர், இளைஞரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

அதில், அவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பதும், இவர் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், புழல் சிறையில் அடைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top