தமிழகம்
ஆடு மேய்க்க சென்ற பெண்.. அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த கொடூரம்.. என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர்கள் விவேகானந்தன் – நித்யா தம்பதி. விவசாயத் தொழில் செய்து வரும் இவர்கள், தங்களது வீட்டில் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆடு மேய்ப்பதற்காக, நித்யா தனியாக சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், ஆடுகள் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து, நித்யாவை தேடிச் சென்ற விவேகானந்தன், அவரது உடல், அரை நிர்வாண கோலத்தில், ஓடை ஒன்றின் ஓரமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா, நித்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நித்யாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொலைக்கு காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
You must be logged in to post a comment Login