Connect with us

Raj News Tamil

போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

தமிழகம்

போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.

பணி நிரந்தரத்தை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்களும், ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு சங்கத்தின் ஆசிரியா்களும், பணி நியமனம் வழங்கக் கோரி 2013-இல் ‘டெட்’ தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் சங்கத்தினரும் கடந்த சில நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

எனவே, அரசு மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார். ஆனால் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் இன்று காலை கைது செய்து சமுதாய நலக்கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

More in தமிழகம்

To Top