Connect with us

Raj News Tamil

“வயிறா.. அடகுக் கடையா” – வடிவேலு பாணியில் திருடிய இளைஞர்..! மடக்கிப் பிடித்த ஊழியர்கள்!

தமிழகம்

“வயிறா.. அடகுக் கடையா” – வடிவேலு பாணியில் திருடிய இளைஞர்..! மடக்கிப் பிடித்த ஊழியர்கள்!

தவம் படத்தில் வடிவேலுவின் காமெடி ஒன்று இடம்பெற்றிருக்கும். அதில், பெண்களின் நகைகளை திருடும் வடிவேலு, அதனை யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, நகைகளை வாயில் போட்டு முழுங்கிவிடுவார். இதேமாதிரியான சம்பவம் ஒன்று, புதுச்சேரியில் நடந்துள்ளது.

புதுச்சேரி நெல்லுமண்டி வீதியில் உள்ள நகைக்கடைக்கு, வடமாநில இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தங்க சங்கிலி வாங்க வேண்டும் என்று கூறிய அவருக்கு, ஊழியர்கள் சங்கிலி வகைகளை காண்பித்துள்ளனர்.

அப்போது, ஊழியர்கள் கண் அசந்த நேரத்தில், அங்கிருந்த 4 கிராம் தங்க சங்கிலியை எடுத்து, வாயின் உள்ளே போட்டு விழுங்கியுள்ளார். இருப்பினும், இதனை கவனித்த நகைக்கடை ஊழியர்கள், அந்த இளைஞரை பிடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மது அருந்த பணம் இல்லாததால், நகைக் கடையில் திருட முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர், சிகிச்சையின் மூலம், தங்க சங்கிலியை வெளியே எடுத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top