இந்தியா
“பிணத்தை எரித்துவிட்டு சாம்பலை சாப்பிடணும்” – கர்ப்பம் அடைய வினோத பூஜை! மனைவி அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தை சேர்ந்த நபருக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணமாகியுள்ளது. திருமணமாகி நீண்ட நாட்களாகியும், அந்த பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி கர்ப்பம் தரிப்பதற்காக மந்திராவாதியிடம் சென்ற கணவன், அவரிடம் சில ஆலோசனைகளை கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மந்திரவாதி, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் சிறப்பு பூஜை ஒன்றை, சுடுகாட்டில் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, தனது மனைவியை சுடுகாட்டிற்கு அழைத்து வந்த கணவன், மனித எலும்புகளை தூளாக்கி சாப்பிட வேண்டும் என்றும், கோழியின் தலையை பச்சையாக சாப்பிட வேண்டும் என்றும், கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், தகன மேடையில் எரிக்கப்பட்டிருக்க பிணங்களின் சாம்பலை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, மறுத்துள்ளார்.
இருப்பினும், அவரை கட்டாயப்படுத்தி, மனித எலும்புகளையும், கோழி தலையையும், சாம்பலையும் சாப்பிட வைத்துள்ளனர். இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ளாத அந்த பெண், அங்கிருந்து தப்பி வந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login