சினிமா
20 வருடங்களாக மோதலில் இருக்கும் வடிவேலு – அஜித்? என்ன தான் பிரச்சனை?
அஜித், ஜோதிகா, வடிவேலு ஆகியோர் நடிப்பில், கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜா. இந்த படத்தில், அஜித் மற்றும் வடிவேலுவின் காமெடி, ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு, 20 வருடங்களாகியும், அஜித்தும், வடிவேலுவும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை.
இதுகுறித்து, சினிமாத்துறையினர் இடையே விசாரித்தபோது, அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தெரியவந்தது. அதாவது, ராஜா படத்தில் அஜித்தின் மாமா கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். இதன்காரணமாக, காட்சிகளில் நடிக்கும்போது, வாடா போடா என்ற சொல்லாடல்களை வடிவேலு பயன்படுத்தியிருப்பார்.
ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட, அஜித்தை அதே பாணியிலேயே வடிவேலு அழைத்துள்ளார். இந்த விஷயம், அஜித்திற்கு பிடிக்காததால், இயக்குநரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவரும், வடிவேலுவிடம் இதுகுறித்து கூறினார். இருப்பினும், அதனை அலட்சியப்படுத்திய வடிவேலு, தொடர்ந்து, அஜித்தை வாடா போடா என்றே அழைத்து வந்துள்ளாராம்.
இதனால் செம கடுப்பான அஜித், தன்னுடைய படங்களில் வடிவேலு நடிக்க கூடாது என்று முடிவெடுத்துவிட்டாராம். அதன்பிறகு, வடிவேலுவை படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர்கள் கூறினால், வேண்டாம் என்று கூறிவிடுவாராம்.
You must be logged in to post a comment Login