Connect with us

Raj News Tamil

“தமிழுக்காகவே போராடி செத்தவன் ஒருத்தன் இருக்கான்” – ரெபல் டீசர் வெளியீடு!

சினிமா

“தமிழுக்காகவே போராடி செத்தவன் ஒருத்தன் இருக்கான்” – ரெபல் டீசர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது, ஹீரோவாகவும் நடித்து வரும் இவர், பல்வேறு வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், இவரது நடிப்பில், நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், ரெபல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கே.இ.ஞானவேல் ராஜா தான், இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே, இப்படத்தின் டீசர், இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில், இப்படத்தின் கதைக்களம் கேரளாவில் நடப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்த தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும், போராடிய போராளியின் கதைப் போல, அந்த டீசர் விரிவடைகிறது. டீசரை பார்த்துள்ள ரசிகர்களும், நெட்டிசன்களும், பாசிட்டிவ்வான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top