Connect with us

Raj News Tamil

சண்டை போட்ட கணவன்.. ரயில் முன் பாய்ந்த ஆசிரியை..

தமிழகம்

சண்டை போட்ட கணவன்.. ரயில் முன் பாய்ந்த ஆசிரியை..

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம். மொபைல் ஷாப் நடத்தி வரும் இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில், அனிதா அரசு தொடக்கப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும், இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா, நேற்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்துக் கொண்டார்.

குடும்ப தகராறு காரணமாக, 2 மகன்களையும், கணவனையும் தவிக்கவிட்டு, ஆசிரியை தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top