சினிமா
ஒரே படத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் சீதா ராமம் நடிகை..!
சீதா ராமம் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மிருணாள் தாகூர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், இவரது மார்க்கெட்டை அதிரடியாக உயர்த்தியது. இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழில் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. இதனிடையே தெலுங்கில் நானிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கும் மிருணாள் தாகூர், இந்த படத்திற்க்காக சுமார் 6-கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயெ, இவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பது சக நடிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
You must be logged in to post a comment Login