தமிழகம்
பூஜைக்காக சிறுமியின் தலை.. அதிர வைத்த மர்ம நபர்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மின் கம்பம் தலையில் விழுந்து, படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலன் அளிக்காமல், உயிரிழந்தார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள மயானம் ஒன்றில், சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. இதனிடையே, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடம், மீண்டும் தோண்டப்பட்டிருப்பதை, அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர். மேலும், அந்த இடத்தில், எலுமிச்சை, குங்குமம், மஞ்சள் என பல்வேறு பொருட்கள் அந்த இடத்தில் சிதறி கிடந்துள்ளன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி பார்த்துள்ளனர். அப்போது, சிறுமியின் உடலில் இருந்து தலை மட்டும் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் தலையை எடுத்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நேற்று சூரிய கிரகணம் என்பதால், சிறுமியின் தலையை பூஜை செய்வதற்கு மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர். சிறுமியின் தலை மட்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login