Connect with us

Raj News Tamil

அதிர்ச்சி சம்பவம்: கணவன் மனைவி மற்றும் 3 பேர் கைது!

தமிழகம்

அதிர்ச்சி சம்பவம்: கணவன் மனைவி மற்றும் 3 பேர் கைது!

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார்.

அதேபோல், கேரளாவின் காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும், அதே பகுதியில் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இவர்கள் இருவரையும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்துள்ளனர்.

அதாவது, பணக்காரர் ஆகும் எண்ணத்தில், பூஜை செய்து நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்மாவின் உறவினர்கள், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளனர்.

ஆனால், பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பத்மாவின் தொலைபேசி எண் மூலம் துப்பு துலக்கிய போலீஸார், அவரும், ரோஸ்லினும் நரபலி கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top