சினிமா
சிரஞ்சீவிக்காக ஸ்ரேயாவை அணுகிய தயாரிப்பாளர்.. சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர், மார்கெட் குறைந்ததால், திருமணம் செய்துக் கொண்டு, சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது, ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் புதிய திரைப்படத்தில், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு, நடிகை ஸ்ரோயாவை படக்குழுவினர் அணுகியுள்ளனர்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று கூறியுள்ளாராம். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், ஸ்ரேயா கேட்ட சம்பளத்தை தர படக்குழுவினர் ஒத்துக்கொண்டார்களாம்.
You must be logged in to post a comment Login