Connect with us

Raj News Tamil

#BREAKING || “இது தவறு கிடையாது” – பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Trending

#BREAKING || “இது தவறு கிடையாது” – பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கடந்த 2016-ஆம் ஆண்டு, பாஜக ஆட்சியின்போது, 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு எதிராக, 58 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசியல்சாசனத்திற்கு எதிரானது என்றும், இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும், எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற் இந்த வழக்கு நீண்ட கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடங்கப்பட்ட அனைத்து மனுக்களையும், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top