சினிமா
புஷ்பாவிடம் விருப்பத்தை சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்! அவ்வளவு ஏக்கமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள இவர், தற்போது ஃபர்ஹானா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இசுலாமியா பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தனக்கு தெலுங்கு மொழி சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளது என்று தெரிவித்தார். நான் வேர்ல்டு ஃபேமஸ் லவ் என்ற திரைப்படத்தில், விஜய் தேவராகொண்டா உடன் நடித்தேன்.
ஆனால், அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எனக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் என்றும், அது எனக்கு Perfect-ஆக செட் ஆகும் என்றும் கூறியிருந்தார்.
அதாவது, ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ராஷ்மிகாவை விட எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login